தேவை:
பாலக்கீரை (நறுக்கியது) - அரை கப்
பூண்டு – 2 பல்
கொண்டைக்கடலை – கால் கப்.
செய்முறை:
தண்ணீர் ஊற்றி கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள், குக்கரில் கொண்டைக்கடலையை மூன்று விசில் வரும் வரை வேகவிடவும்.
ஒரு கப் கொதிக்கும் நீரில் கீரை, பூண்டு சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிடவும்.
பிறகு தண்ணீரை வடிகட்டி அதில் உள்ள கீரை, பூண்டை எடுத்து, அதனுடன் வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கூழாக்கவும்.
இந்தக் கூழை மீண்டும் அடுப்பில் ஏற்றி லேசாகச் சூடு செய்தபின் குழந்தைக்குத் தரலாம்.
குறிப்பு: இந்த ப்யூரி எட்டு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு ஏற்றது.
No comments:
Post a Comment