குழந்தைக்கு உளுந்து களி செய்வது எப்படி?
தேவை:
அரிசி - 2 டேபிள்ஸ்பூன்
தோல் உள்ள கறுப்பு உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு – 2 பல்
கேரட் - பாதி அளவு (துருவவும்)
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை
சீரகம் – கால் டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
அரிசி மற்றும் கறுப்பு உளுந்தை தனித்தனியாக கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
குக்கரில் நெய்விட்டு, சீரகம் தாளிக்கவும். அதில் பூண்டு, கேரட் சேர்த்து வதக்கவும். இதனுடன் ஊறவைத்த அரிசி, உளுந்து, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
பிறகு, இதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து 2 - 3 விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும்.
பின்னர் இந்தக் களியை நெய்விட்டு கைகளாலே நன்கு மசித்து குழந்தைக்குக் கொடுக்கவும்.
குறிப்பு: எட்டு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு ஏற்றது இந்தக் கிச்சடி.
No comments:
Post a Comment